கரையவில்லை உன்னிதயம் இதயம் 1 தன் நிக்கான் கேமிராவில் படிந்த சிறு தூசியைப் பூ போல ஊதி தள்ளி அணிந்திருந்த வெள்ளை சட்டையில் அதை துடைத்து தன் பையினுள் பத்திரப்படுத்தி வைத்தவள், "ஃபங்சன் எங்கனு சொன்ன?"என தன் நண்பனிடம் கேட்டாள் வைஷ்ணவி. "கே.கே. நகர், சந்திரன் அபார்ட்மெண்ட். பேபிஷவர் ஃபங்சன்?"என்றான் பரணி. "சரி, நான் அகிய கூட்டிட்டு போறேன். நீ நேத்து எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும் பிரிண்ட் போட்டு வை" என்றவளை மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு,"அந்த வேலைய எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீ மொதல போற வேலைய ஒழுங்கா முடிச்சிட்டு வா ! ஃபங்சன் நடக்கற இடத்துக்கு போற பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காம போனோமா, வந்தோமானு இரு தாயி !"எனக் கையெடுத்து கும்பிட்டு கேட்டான். அவன் சொன்னதும் கோபம் முனுக்கென்று வந்தது அவளுக்கு."ஆமாடா நான் தான் எல்லா ஃபங்சன்லையும் போய் வேலைய பார்க்காம பஞ்சாயத்து பண்றது தான் என் வேலை பார். நான் போட்டோ எடுக்கும் போது என்னை டிஸ்டர்ப் பண்ணா, எனக்கு கெட்ட கோபம் வரும்னு உனக்கு தெரியாத?" "எனக்கு தெரியும் தாயி. ஆனா அங்கிருக்கிறவனுக்கு தெ
Super sarsvathi superoooò
ReplyDeleteThank you so much sis .
ReplyDeletenext ud pls
ReplyDeleteபோட்டாச்சு sis
Delete