இதயம் - 41
இதயம் 41
சிறு உப்பை சேர்த்து மேலும் தித்திக்க வைக்கும் இனிப்பை போன்று கரிக்கும் உப்போடு சிறு இதழ் முத்தம் சேர்ந்து ருசியாக மாறியது உணவும்
தோசையுடன் நான்கு இதழ்களும் மெல்ல பட்டன.
பெருவிரலில் நின்று அவனுயரத்திற்கு எக்கிக் பட்டும் படாமல் முத்தம் கொடுத்தவளின் இடையில் கைகளை கோத்து அவளை தன்னுயரத்திற்கு தூக்கி அவளுக்கு மேலும் உதவிச் செய்தான்.
முத்தத்தில் சுற்றங்களை மறந்த இருவரும், அங்கு வந்து நெஞ்சடைக்க நின்ற சரஸ்வதி எழுப்பிய அரவத்தில் தான் பிரிந்தனர்.
கையில் வைத்திருந்த தட்டை கழுவ போட்டு கையை கழுவியவள், அவர் முன்னே வெட்கப்பட்டு ஓடிவிட்டாள்.
ஆனால் அவரோ சைத்துவை பிடித்துக் கொண்டார்."என்ன நடக்குது சைத்து இங்க? நீ அவளை தொட மாட்டேன் சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்க நியாபகம் இருக்கா? இல்லையா? பொண்டாட்டியா வந்ததும் உரிமை எடுக்க தோணுதா??"பல்லைக்கடித்து கொண்டு கேட்டார்.
அவர் கேட்ட கேள்வியில் சீற்றம் கொண்டவன் கண்களை மூடி, நா வரை வந்த வார்த்தைகளை அடக்கிப் பொறுமையாக அவருக்கு பதில் தந்தான் சைத்து,
" முத்தம் கொடுத்தது அவ, நான் இல்ல. என் கிட்ட தானே சத்தியம் வாங்கினீங்க. அவ கிட்ட இல்லையே ! அவளா வந்து புருஷன்ற உரிமைய எடுத்தால் நான் என்ன பண்ண ? அவளால என் கற்பு கூட பறிப் போகலாம் யார் கண்டா? நான் சத்தியத்தை மீறல அவ கிட்ட நீங்க எந்த சத்தியமும் வாங்கல, அதனால எது நடந்தாலும் அதுக்கு நான் பொறுப்பில்ல..."என்று பின்னந்தலையை கோதி விட்டபடி அவன் செல்ல , அவரோ நெஞ்சை பிடித்துக் கொண்டு அரண்டு போய் நின்றார் மகன் பேசிய பேச்சில்.
அவரைப் பொறுத்தவரை காமத்தை ஆண் மட்டுமே அணுகிப் பெற வேண்டும். அது இருவரும் அணுகி பெற சம உரிமை இருக்கு என்பதை அவர் சம்பிரதாய சாங்கில் இல்லை போலும். இதை அவர் யோசிக்கவும் இல்லை. அவள் இங்கே நிரந்தரமாக இருந்திடுவாளோ என்ற அச்சம் உள்ளுக்குள் பரவ ஆரம்பித்தது. அவளை இங்கிருந்து அப்புற படுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசனையுடன் சென்றார்.
அறைக்குள் வந்தவன் மெத்தை சரி செய்துக் கொண்டிருப்பவளின் அருகே வந்து தன்னை பார்க்குமாறு அவளை திருப்பினான்.
அவன் புறம் திரும்பியவள் "என்ன?"என கேட்டு புருவம் உயர்த்தினாள்." நீ கொடுத்த முத்தம் என் பெரியம்மாவை பழிவாங்க வா ?" என கேட்டு அவளது நல்ல மனநிலையை மோசமாக மாற்றிவிட்டான்
கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு அவன் முன்னே சன்னமாக நின்று முறைத்தவள்" சாருக்கு எப்படி தெரியுது? நான் உங்க பெரியம்மாவை பழிவாங்க தான் முத்தம் கொடுத்தேனா??"எனக் கேட்டவளுக்கு அந்த இடத்திலே அவனை வெட்டிக் கொல்லும் அளவிற்கு கோபம்.
அவளது கோபத்தை உணர்ந்தவனுக்கு மனதில் அப்படி ஒரு ஆனந்தம் அதை உள்ளுக்குள் மறைத்தவன் அவளிடம் யோசித்தே தன் கருத்தைப் பகிர்ந்தான்"எனக்கு அப்படி தோணல தான். ஆனா எங்க நீ அப்படி சொல்லி என் உணர்வு மேல மண்ணள்ளி போட்டுடுவீயோனு பயந்துட்டேன்"என்று நெஞ்சில் கைவைத்து சொன்னான்.
'உன் தலையில கல்லை தாண்டா தூக்கி போடணும். மனுசனா இவன்? முத்தம் கொடுத்த அதை பத்தி யோசிக்காம... கண்டதையும் யோசித்து என் கழுத்த அறுக்குறான் பாவி' உள்ளுக்குள் அவனை வாசைப்பாடினாள் அவள்.
"என்னடி உள்ளுக்குள்ள இந்த சைக்கோ புருசனுக்கு அர்ச்சனை நடக்குது போல..."சரியாக கணித்து சொன்னான்.
"பின்ன நீ கேட்ட கேள்விக்கு பாராட்டி பரிசு கொடுக்கணுமா? ஏன் இப்படி முட்டா சைக்கோவா இருக்க நீ?" எனக் கேட்டு விட, அவள் மனநிலையை அறிந்தவனுக்கு உள்ளுக்குள் தன் மீதே ஆத்திரமாக வந்தது.
தன் காதலி தன் மனைவி கைக்கு அருகே இருந்தும் அற்ப சத்தியம் அவனை ஆட்டி படைப்பதை நினைத்து அவனுக்கே அவனை நினைத்து கேவலமாக இருந்தது. அவனே அவனுக்கு காரி துப்பிக் கொண்டான்.
அவள் அவனை பார்த்து கொண்டிருக்க, அவளிடம் விரக்தியாக சிரித்தவன்" கெத்தா இருந்தேன்டி உன்னை பார்க்கிற வரைக்கும். இப்படி மாத்திட்டீயே !"என கேட்டு விட்டு மெத்தையில் சென்று படுத்துக் கொண்டான்.
அவன் சொன்ன உள்ளர்தத்தை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தாள்."என்ன தூங்க வரல ?"தன் பக்கத்தின் இருக்கையை காட்டி கேட்டான்.
'இதுக்கு ஒன்னு குறைச்சல் இல்ல'என எண்ணிக் கொண்டு இடைவெளி விட்டு படுக்க, அவனோ அவளை நெருங்கி அணைத்து இடைவெளிக்கு இடைவேளை கொடுத்து அனுப்பிருந்தான்.
தன் நெஞ்சிலிருக்கும் அவன் கையை பார்த்து திரும்ப நினைத்தவளின் கழுத்தில் முகம் புதைத்து கண்ணை மூடியிருந்தவனின் முகம் பார்க்க முடியவில்லை.
'ஒருவேள எப்படி ஆரம்பிக்கணும் தெரியாமா இருக்கானோ !' அவனை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினாள்.
****
அழகாய் பொழுது விடிந்தது. காலையில் நேரமாக எழும்பி குளித்து விட்டு கிளம்பியவன், வைஷுவை எழுப்பி முக்கியமான டான்ஸ் காம்படிசன் இருப்பதாக சொல்லி விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு சென்றான்.
அவன் சென்றதும் மெத்தை விழுந்தவளுக்கு தூங்கம் இம்மியளவும் வரவில்லை. அலைபேசியை எடுத்து தன் கணவனின் புகைப்படத்தை பார்த்து ரசித்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.
தாமதமாக எழுந்து குளித்து விட்டு தயாராகி வந்தவள் சரஸ்வதியின் வசவு வார்த்தைக்களை சுப்ரபாதமாக எடுத்துக் கொண்டு சாப்பிட அமர, சங்கட்டமாக சாந்தி உணவை பரிமாறினார்.
அவளோ சரஸ்வதியை பொருட்டாக மதிக்க வில்லை. சாப்பிடுவதில் மட்டும் குறியாக இருந்தாள். அவர் தான் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டார். உணவை முடித்துக் கொண்டு கூடத்தில் அவருக்கு எதிரே அமர்ந்தவள் கேமிராவை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
அவளது கேமிராவை வைத்த கண்ணை எடுக்காமல் குரூர புத்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அதை தூக்கிப் போட்டு உடைக்கலாம் போல இருந்தது. அவள் கேமிராவை அங்கே வைத்து விட்டு அறைக்கு செல்ல, அவரோ எடுத்து உடைக்கலாம் என்ற முடிவுடன் அதை எடுக்கச் செல்ல. அதற்குள் அக்காவின் மனதை அறிந்து அதை தடுக்க நினைத்த சாந்தி வேகமாக வந்து அதை கையில் எடுத்து இருந்தார்.
அதை புதிதாக பார்ப்பது போல பார்த்தார்"என்ன நீ கேமிராவை பார்க்காதது போல பார்க்கற?"என சலித்து கொண்டே கேட்டார்.
"உனக்கு தான் தெரியுமே எனக்கு கேமிரானா எனக்கு ரொம்ப பிடிக்கும்னு"என்றவர் சொல்ல மீண்டும் அவரிடத்தில் ஒரு சலிப்பு.
"உங்களுக்கு கேமிரானா பிடிக்குமா?" என ஆச்சரியத்துடன் கேட்டு வந்தாள் வைஷு.
அவள் புறம் திரும்பி கேமிராவை அவளிடம் கொடுத்தவர்"ரொம்ப பிடிக்கும் வைஷுமா. அப்பா கேமிராமேன் தான். அவரோட கேமிராவ பார்த்துட்டே இருப்பேன். அப்பாவ பார்த்து பார்த்து எனக்கு கூட போட்டோகிராப்பர் ஆகணும் ஆசை வந்தது. ஆனா அன்னைக்கி இருந்த நிலைமையில் பொண்ணுங்க கேமிரவா பிடிக்கிறதா? அதுக்கு எல்லாம் ஒரு படிப்பு இல்லைனு சொல்லிட்டாங்க நானும் வேற படிப்ப எடுத்து படிச்சேன்"என்று பழைய நினைவுகளை நினைத்துக் கொண்டு சோகமாக சொன்னார்.
அதற்கு முழுமுதற் காரணம் 'இவராக தான் இருப்பார்' என்று சரஸ்வதியை முறைக்க அவரோ யாருக்கோ வந்த விருந்தாக அவர்கள் பேச்சை கண்டு கொள்ளாமல் இருந்தார்.
அவரை முறைத்து விட்டு"அத்த வேலை எல்லாம் முடிச்சி ஃபீரி ஆகிட்டீங்களா??"என வினவினாள்.
"இப்போ ஃபிரீ தாண்டா மதியம் தான் நம்ம நாலும் பேருக்கு சமைக்கணும்..."என்றார்.
"ஓகே. இன்னைக்கி நம்ம வெளிய போலாம் வெளிய சாப்பிடலாம். இவங்க ரெண்டு பேரும் தான. ஸ்ருதிக்கிட்ட சொன்னா சேர்த்து சமைச்சி கொடுத்துடுவாங்க. இல்லேன்னா அகி அம்மாட்டா சொல்லலாம். இல்ல இவங்களுக்கே யார் கிட்ட சாப்பிடணும்னு தோணுதோ சாப்பிடட்டும் நீங்க வாங்க போலாம்"என்று அவரை அழைக்க, அவருக்கு ஆசைகள் இருந்தாலும் அக்காவை நினைத்து தயங்கினார்.
"ஏய் ! எங்க கூட்டிட்டு போற அவள. உன்னை போல அவளை பொறுப்பில்லாதவனு நினைச்சியா நீ ! அவ எங்கயும் வர மாட்டா நீ போ !"என்று கடிந்தார் சரஸ்வதி.
"உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க உங்களையும் கூட்டிட்டு போறேன். ப்ளீஸ் அவங்களை தடுக்காதீங்க. அவங்களை தவிர வேற யாரும் அவங்களை தடுக்க முடியாது. அத்தை இவங்களுக்கு பயந்து வீடே கதினு கிடந்தது போதும் உங்க மருமக கூப்பிடுறேன் வருவீங்களா மாட்டிங்களா?"அவளும் அவருக்கு சலித்தவள் இல்லை என்பது போல பார்த்து நின்றாள்.
"அக்கா ! நான் போய்ட்டு வர்றேன். உனக்கு தேவையானத எடுத்து வச்சிருக்கேன். நீ பார்த்துக்க. எனக்கு பசங்களோட வெளிய போகணும் ஆசை. ஆனா இதுவரைக்கும் நடந்தது இல்ல. இன்னைக்கி மருமக கூப்பிடுறா மறுக்க தோணல போய்ட்டு வர்ரேன்"என்று சந்தோசமாக கிளம்ப, அதுக்கு மேல் அவரால் தடுக்க முடியவில்லை.
****
தன்னுயிர் சிறு புள்ளியாய் அசைவதை கண்டு கண்ணீர் வடித்து மனைவியின் கழுத்தில் முகம் புதைத்து அழுதான் எகாந்த்.
அவனுக்கு ரத்தம் சொந்தம் என்று இருப்பது தாய் மாமன் விஷ்ணு மட்டும். ஆனால் இன்று ஒரு சிறு உயிர் உதித்து இன்னும் பத்து மாதங்களில் கைக்கு வரப் போவதை எண்ணி அகம் தாளமுடியாத சந்தோசம் அவனுக்கு.
படுத்திருக்கும் மனைவியின் வயிற்றில் ஜெல்லை தடவி மருத்துவர் தேய்க்க திரையில் அவள் மணி வயிற்றுக்குள் இருக்கும் சிறு உயிரை கண்டு தாய் தந்தையாக ஆனந்தக் கண்ணீரில் கரைந்தனர். அதை தனது அலைபேசியில் சேமித்தும் வைத்தான் .
பின் மனைவி, குழந்தை இருவரின் உடல் நலத்தை
மருத்துவரிடம் கேட்டு அவர்
கொடுத்த சில அறிவுரைகளையும் காதில் போட்டுக் கொண்டு வெளியே வந்தனர்.
"அடுத்த முறை ஸ்கேன் பார்க்கும் போது உன்னை உள்ள விடக் கூடாதுனு சொல்ல போறேன் எகா !"என்றாள் அவன் கைபிடித்துக் கொண்டு
'எல்லாம் சரியாக இருக்கிறதா?' என்று பார்த்த படி வந்தவன் அவள் சொன்னதும் அவளை நிமிர்ந்து பார்த்து "ஏன்டி நான் என்ன பண்ணினேன்?"
"பின்ன அங்கே அழுது வடிஞ்சா, கிண்டல் பண்றாங்க நர்ஸ் சிஸ்டர்ஸ எல்லாம். இதுகே உன் புருஷன் அழறான். இன்னமும் பத்து மாசம் கழிச்சி உனக்கு வலி வருமே, அதுக்கு என்னலாம் பண்ணப் போறானோ நீ வலியில துடிச்சாலும் கதற போறது உன் புருஷன் தான் சொல்லி கிண்டல் பண்றாங்கடா"என்றாள் சிணுங்களாக
"கண்டிப்பா அழுவேன் கதறுவேன். உனக்காக அழலேனா வேற யாருக்காக அழ போறேன். மத்தவங்க எப்படியோ நான் அழுவேன் உனக்கு வலி அங்கனா எனக்கு வலி இங்க"என்று நெஞ்சை தொட்டவன்" நானும் செத்து பிழைப்பேன்டி அது அவங்களுக்கு எங்க தெரிய போகுது"என்றிட,
விழியகற்றாமல் அவனை கலங்கிய கண்களுடன் பார்த்தவளை தோளோடு அணைத்து நெற்றியில் முத்தம் வைத்து கண்ணீரைத் துடைத்து விட்டு அழைத்து போனான்.
****
காலையில் சென்றவர்கள் இரவில் தான் வீட்டிற்கு வந்தனர். காலை வேளையாக சாந்தியை கடைக்கு அழைத்து சென்றாள். பின் அவரை அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பினாள்.
அவருக்கு பிடித்த இடத்திற்கு சென்று அவர் கையில் கேமிராவை கொடுத்து போட்டோ எடுக்கச் சொன்னாள்
அவரது ஆசையை அன்று முழுக்க நிரை வெற்றி வைத்தாள்.
முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வந்த சாந்தியை மூவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். சனா சமையலை மூவரும் சாப்பிட, இரவு உணவையும் முடித்து விட்டு தான் சாந்தியும் வைஷுவும் வந்தனர் .
"என்ன அண்ணி உங்க மாமியார மட்டும் தான் கூட்டிட்டு போவீங்களா என்னை எல்லாம் கூட்டிட்டு போக மாட்டிங்களா?"
"உன்னை ஒரு நாள் கூட்டிட்டு போறேன் சனா. உனக்கு லீவ் விடட்டும் நாம வெளிய போலாம்"என்றாள்.
உடனே தேவனும்"நானும் இந்தக் குடும்பத்தில ஒரு ஆள் தான் மருமகளே ! என்னையும்..."என இழுக்க, சாந்தி அவரை முறைத்தார்.
அதை கண்டு வாய்விட்டு சிரித்தவள்"மாம்ஸ் உங்களை நான் கண்டிப்பா வெளிய கூட்டிட்டு போறேன் அதுவும் உங்க ஆசைய போல நல்ல ஆண்டிஸா பார்த்து சைட் அடிக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்ன "என கேட்டு அவரை மாட்டிவிட்டு ஓட"எதே ஆசையா?"என சாந்தி கரண்டியை தூக்க,
தட்டில் தன் முகத்தை மறைத்தவர் "ஐயோ அது நான் இல்ல... மருமக தமாஸ் பண்ணிட்டு போகுது மா " என்று இளித்து வைத்தார் . சைத்துவும் சனாவும் விழுந்து விழிந்து சிரித்தனர் .
அறையில் உடை மாற்றி மெத்தையில் விழுந்தவள், எகா அவளுக்கு காலையில் அனுப்பிருந்த ஸ்கேன் வீடியோவை பார்த்தவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
"என்ன பார்த்துட்டு இருக்க?"அவ அருகே அமர்ந்து கேட்டவனிடம் காட்டினாள் அதை.
கருப்பு திரையில் வெள்ளையாக அசையும் சிறு புள்ளியை பார்த்து மெய் சிலிர்த்து போனான் சைத்து. ஆனால் அடுத்த நொடி அவனது முகம் மாற அலைபேசியை அவளிடம் கொடுத்தான். அவளும் அவனது முக வடிவைப் பார்த்து கொண்டு தான் இருந்தாள்.
அவள் எதுவும் அதை பற்றி பேச வில்லை மாறாக வேறு பேசினாள்" இன்னும் இரண்டு நாள்ல நான் ஊட்டி போகணும். அங்க ஒரு மேரேஜ் போட்டோ கவரேஜ் இருக்கு. எங்களை தான் புக் பண்ணிருக்காங்க. ஒரு நாலு நாள் அங்க தங்கறது போல இருக்கும்"என்றாள் சாதாரணமாக
"நாலு நாளா???"என்றான் அதிர்ச்சியாக,
"ம்ம்.. ஆமா ஃபிரீ வெட்டிங் சூட், எங்கேஜ்மெண்ட், மேரேஜ் அண்ட் அடுத்த நாள் பேமிலி சூட் இருக்கு சோ நாலு அங்க இருக்கிறது போல இருக்கும் அவங்களே எல்லாம் ஃபேசிலிட்டீஸ் பண்ணி கொடுத்திடுவாங்க... பயமில்ல பத்திரமா போயிட்டு வந்திடுவேன்"என்றாள்.
"அது ஓகே. நாலு நாள் உன்னை விட்டு எப்படி???"என மறைமுகமாக தன் ஏக்கத்தை சொல்ல முயல, "ஆமா நான் இங்க இருந்தால் மட்டும் என்ன நடந்திட போகுது. இங்க இருக்கிறதும் அங்க இருக்கிறதும் ஒன்னு தான். ஓவர் பீலிங் எல்லாம் வேணாம் சைக்கோ ! நான் போயிட்டு வரேன் "என்று மீண்டும் அவனை தாக்கியபடி பேச, அவனோ முகம் கறுத்துபோய் அமர்ந்து விட்டான்.
அவளோ இது ' தேறாத கேசு 'என்று மெத்தையில் சென்று படுத்துக் கொண்டவளுக்கு தெரியாது அவன் கொடுக்க போகும் இன்ப அதிர்ச்சி என்னவென்று
Comments
Post a Comment