இதயம் - 35
இதயம் 35 தான் நினைத்ததை மட்டும் தான் இதுவரை வரை நடத்தி வந்திருக்கிறார் சரஸ்வதி. அவர் வைத்தது தான் சட்டம் என இருந்தது அந்த இல்லம். ஆனால் அவர் வைஷுவை பார்த்த கணத்திலிருந்தே அவரது அதிகாரங்கள் பழிக்காமல் போனது. அவரது வார்த்தைக்களுக்கும் மதிப்பும் இல்லாமல் போய் விட்டது. அவளை கண்டாலே தனக்கு ஆகாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் போலும். அவளை அறவே வெறுத்தார். அவள் மேலுள்ள வெறுப்பை தனக்குள் வைத்துக் கொள்ளாமல் அதை வெளியே காட்டியும் வர, அவருக்குப் பிடித்தது சனி எனலாம். அவள் 'எக்கேடும் கேட்டு போகட்டும்' என்று இருக்காமல் தோழியை காப்பாற்றிக்கிறேன் என்று வேறெங்கோ சென்ற ஓணானை தன் மடியில் கட்டிவிட்டது போல தான் கதையானது. தனது தோழியின் வீட்டிற்கும் மருமகளா 'வைஷு செல்லக் கூடாது' என்று அவளை பற்றி தவறாகச் சொல்லி அவரது மனதிலும் வெறுப்பை விதைக்க வைத்தவர். இன்று அவளையே தன் செல்ல மகன் சைத்துவிற்கு மனைவியாக தனக்கு மருமகளாக்கி, தான் செய்த பாவத்தை அறுவடைச் செய்ய காத்திருக்கிறார் சரஸ்வதி. அவளை மருமகளாக ஏற்க அவருக்கு மனம் வரவில்லை. அவரைப் போல மனமும் முரண்டு பிடித்தது. அவளை மருமகளாக ஏற்றுக