மடல் - 8
வழக்கம் போலவே விடியலை எதிர்கொண்டு, ஆற்ற வேண்டிய கடமைகளை முடித்து விட்டு, மறு வீட்டிற்கு (கடைக்கு ) வந்த சேர்ந்தனர் தேவாவும் திகழும். கடைக்குள் நுழைந்த தேவா ! முருகனை ஏக்கமாகப் பார்த்து விட்டு சென்றாள். அவள் முருகனை ஏக்கமாகப் பார்த்து விட்டு செல்வதை திகழும் கவனிக்க தான் செய்தாள். இன்னும் மூன்று நாட்களுக்கு முருகனுக்கு எந்தப் பூஜையும் இருக்க போவதில்லை. சுவரில் மாட்டிருக்கும் புகைப்படங்களை போல அவரும் காய்ந்த பூவுடன் வாடி கிடக்க வேண்டியது தான். முருகனுக்கு பூ வாங்கி போடுவதும் பூஜை செய்வதும் தேவா மட்டும் தான். திகழ் செய்வே மாட்டாள். அந்த மூன்று நாட்களில் தேவா அவளை செய்ய சொல்வாள், "மக்கூம்... போடி "என்று போய் விடுவாள். தன் அன்னை இறந்த பின் குறைந்து போன கடவுள் பக்தி, சிற்றன்னையின் கொடுமையில் கொஞ்சம் குறைய, தந்தை இறந்த பின் கடவுள் மேல் பற்று இல்லாமல் போனது திகழுக்கு. அவள் கடவுளை தரிசிக்க மாட்டாள். கோவிலுக்கும் செல்ல மாட்டாள், தேவா வீம்பாக அழைத்துச் சென்றாலும், பொங்கல் புளியோதரையுடன் முடித்துக் கொள்வாள். மேற்படி வேண்டுதலும் வைக்க மாட்டாள்... அவளை அவள் போக்கில் விட்டு விட்டாள்