வரன் - 23
நேகாவின் தலையில் இரண்டடி தட்டிய பின்னே இருமல் நிக்க, தீனாவின் கையைப் பிடித்துக் கொண்டவள் ' உனக்கு முன்னாடியே தெரியுமா?' என்பது போல பார்த்து வைக்க, அவனும் தெரியும் என்பது போல கண்களை மூடி திறந்தான். அவனை வெகுவாய் முறைத்து விட்டு தன் அக்காவைப் பார்க்க, அவளோ அதிர்ச்சியில் விரிந்து கிடந்த இரு கண்களை அவன் மேல் பதித்திருந்தாள். "மாமஸ் நீங்களும் இவனும் கூட்டு சேர்ந்து விளையாடுறீங்க தான? இது உண்மை இல்ல தான !" பொய்யாக இருக்கக் கூடும் என்றெண்ணி அவள் கேட்டு வைக்க, ஆரனோ சகலையிடம் கண்ணைக் கட்டினான். அவனும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி அவள் புறம் வாகாய் அமர்ந்தவன், "செல்லக்குட்டி, சகலையும் நானும் விளையாடலடி எங்களுக்கு விளையாடுற வயசு தாண்டிருச்சிமா"என்றான் கேலியாக. விஷயத்தை விளக்குவான் என்று அவன் கூற வருவதைக் கவனமாக கேட்டு வந்தவள் அவனது ஹாஸ்ய வார்த்தைகளை கேட்டு கொதித்து போனாள், " ஆல்ரெடி வெந்து போன மாதிரி இருக்க உன் முகத்த மேலும் வேக வச்சிடுவேன் விஷயத்தை சொல்லு!" எனத் தன் விழிகள் இரண்டையும் உருட்டி மிராட்டினாள். "ஓகே ஓகே சும்மா ஃபனுக்கு தான் சொன்னே