வரன் - 8
வடுகபட்டி (கற்பனை) கிராமத் தலைவர் தான் மந்தவராயன். அவரது தம்பி காத்தவராயன். இருவரும் ஒரே ஊரில் தனித்தனி இல்லத்தில் வசித்து வருகின்றனர். இருவரும் ஆளுங்கட்சி தொண்டர்கள். அந்தக் கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரௌடிகள். மந்தவராயனை கூட மனித லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் இந்தக் காத்தவராயன், எதிலும் சேர்க்க முடியாத உயிரினம். அண்ணன் தலைவர் என்பதால் வால் நன்றாக ஆள்(டு)கிறது. ஊர்மக்களுக்குள் ஜாதி பார்த்து, தங்கள் ஜாதிக்காரர்களுக்கு அரசு சலுகைகளையும் இலவசங்களையும் அள்ளி கொடுத்து விட்டு, மற்றவர்களை ஏமாற்றுவதே இருவரது பொழப்பு. மேலும் கட்டப் பஞ்சாயத்து, வட்டித் தொழில் பெண்கள் சகவாசம் என அனைத்து குணங்கள் பெற்ற கலப்படம் இல்லாத கெட்டவன் தான் காத்தவராயன். அவனுக்கு வெளியே சொல்லிக் கொள்ள ஒரு மனைவியும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடவுகளாகப் பார்த்து ஒரு மகளோடு நிறுத்திக் கொண்டார். மகன் இருந்தால் மேலும் ஆடிருப்பான். மகள் கனிமொழி இன்ஜினியரிங் படித்து விட்டு வெட்டியாக காலத்தை தள்ளுகிறாள். அவன் வீட்டில் தோட்ட வேலை செய்யும் திருமால், பி .ஏ ஆங்கிலம் படித்து முடித்து மேற்கொண்டு பி.எல் பட