வரன் - 6

 




சர்வமும்  அடங்கிய படி அமர்ந்திருந்தாள் மேகா. ' இப்போது  தான் என் மனைவி எனக்கு பயப்பட கூடாது'என்றுரைத்தவன் தனது கோபக் குரலால் அவளுக்கு பயத்தை காட்டிக் கொண்டிருந்தான்.


"உன்னை நான் ஏமாத்தினா நீ சும்மா இருப்பீயா மேகா?" எனக் கேட்க அங்கே பதில் இல்லை. கோபத்தில் தன் பெயர் சொல்லிக் கேட்டதைக் குறித்து வைத்துக் கொண்டாள். 


"பல லட்சம் குடுத்து வாங்கின வேலைனு நினைச்சியா டி? பல நாள் இரவு 

தூங்காம, ரோட்டோரமா பிரண்ட்ஸ் கூட  கொசுக்கடியிலும் குளீர்னு 

பார்க்காம கண் விழிச்சி படிச்சி வாங்கினது டி. நேர்மையா இருக்கணும் நியாயமா இருக்கணும் மனசுல கல்வெட்டா பதிச்சி வச்சிட்டு வேலை பார்க்கிறேன். நேர்மையா இருந்தால் என்னால எவன் முன்னாடியும் தல நிமிர்ந்து  நிக்க  முடியும். எதிர்த்து கேள்வி கேட்க முடியும். ஃபிராட் வேலை பார்த்து பணம் வாங்கினேன் வச்சிக்கோ, வரவனெல்லாம் என்னை ஒரு நாயா நினைச்சி,  பணத்த தூக்கிப் போடுவான்.

அடுத்தவன் முன்னாடி  நாயா  நிக்கக் கூடாது சிங்கமா நிக்கணும்.  நான் நிப்பேன். என் வேலைத் தான் என்னோட பிரைட், அத மத்தவனுக்காக  என்னைக்கும் விட்டுக் கொடுக்க  மாட்டேன். அதுக்கு  ஒரு கலங்கமும் வர விட மாட்டேன். ஸோ உன் புருஷனையும் அவன் அதிகமா நேசிக்கற வேலையை பத்தியும் தெரிஞ்சிக்க, வி. ஏ. ஒ க்கே இப்படியானு? நீ நினைக்கலாம். அரசாங்க வேலைங்கற மக்களுக்கு நேரடியா  சேவை செய்ற வேலை. அதுல  பணக்காரன் ஏழைனு எல்லாரும்  அடங்குவான். என்னை நம்பி வரவன் கிட்ட உண்மை இருந்தால் நானும் ஒரு சேவகனா வேலை செய்வேன். அவன் கிட்ட உண்மை இல்ல ஒரு மயிரா கூட நினைக்க  மாட்டேன்.  என் வேலையில நான் தான் ராஜா. என் அதிகாரம் அங்க தான் இருக்கணும். அதுக்கு என் கை சுத்தமா இருக்கனும், இதான் நான். அரசு அதிகாரி தான லஞ்சம் எதிர்ப்பார்கலாம் நீ நினைச்சா, உன் எண்ணத்தை மாத்திக்க. எங்க அப்பா என்னை அப்படி வளர்க்கல மேகா" என்று தன் வேலையில் இருக்கும் பற்றை நீண்ட நெடிய உரையாக, கர்வத்தோடு சொன்னான். அவள் தேகம் சிலிர்க்க, மயிர்கள் குத்தி நிக்க, அப்படி ஒரு புல்லரிப்பை உணர்ந்தாள் மேகா.


"லைன் இருக்கீயா மேகா !"என்றான் சக்கர என்று அவன் அழைக்கவில்லை.


"புருஷன்  அரசு அதிகாரி, லஞ்சம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிற மனைவி நான் கிடையாது. என் புருஷன் நேர்மையானவன் நெஞ்சை நிமிர்த்து கிட்டு சொல்லத் தான் பிடிக்கும். அவரோட பிரைட் எனக்கும் தான் பிரைட். அதுக்கு நானும் எந்தக் கலங்கத்தையும் வர விட மாட்டேன்" என்று அக்மார்க் ஆரனின் மனைவியாக பேசினாள். அவள் மேலெழுந்த சிறு கோபமும் பனியாய் கரைந்து காதல் துளிர்ந்தது. 


"வாரே வா ! மிஸஸ் ஆரனா ஃபார்முக்கு வந்துட்டீங்க போல " என நக்கல் செய்ய, அப்போது தான் பேசியதை உணர்ந்தவள் நாக்கைக் கடித்து கொண்டாள். ' இவன் கூட பேசியே என் மூளையும் மனசையும் இவன் பக்கம் சாய்கிறான் மிளகா ! மிளகா !' என செல்லமாக கடிந்தாள்.


"ஸாரிங்க, நீங்க உங்க வேலைய எவ்வளவு நேசிக்கிறீங்கனு தெரியாம சொல்லிட்டேன். அக்கேன் ஸாரி"  எனக் கொஞ்சும் குரலில்  கெஞ்சினாள். அவன் கண் முன் உருக காத்திருக்கும் பனிக்கூழ் போல இருந்தது. அதனை ருசிக்க ஆசை தான் ஆனால் இன்னமும் தனக்கென சொந்தமாகாமல் இருக்கிறாகளே என்று பெருமூச்சை விட்டவன்,


"ஏய் சக்கர ! ஸாரிய தவர வேற வார்த்தையே தெரியாதா உனக்கு? லவ் யூ, மிஸ் யூ , கிஸ் யூ , ஹக் யூ எக்ஸ்டரா எக்ஸ்டரா னு கணவன் மனைவிக்குள்ள பேச லட்ச வார்த்தைகள் இருக்கு டி. இதுல ஒண்ணாவது என்கிட்ட சொல்றீயா நீ?" கோபம் தணிந்து குரல் குழைய, அவளுக்குள் நிம்மதி பரவியது.


"நீங்க என்னை லவ் பண்றீங்க, ஸோ நீங்க இந்த வார்த்தையை தயக்கமில்லாம சொல்றீங்க. நாங்க உங்களை பார்த்து ரெண்டு நாள் தான் ஆகுது. இந்த ரெண்டு நாள்ல நீங்க என்னை இம்பரஸ் பண்ணது உண்மை தான். அதுக்காக உங்கள போல எனக்கு உங்க மேல காதல் இன்னும் வரல, நான் எப்படி இந்த வார்த்தைகளை சொல்லுவேன்?" உண்மையை  அவனுக்கு விலக்கினாள்.


"குட் ! இப்படி தான் என்கிட்ட போல்ட்டா பேசணும். நான் கேட்டதும் எனக்காக பொய்யா சொல்லாமல்  போல்டா உன்  ஃபீலிங்க்ஸ் சொன்ன பார்த்தீயா,  ஐ லைக் யூ அண்ட் லவ் யூ. இனி நான் தினமும் பேசி, உனக்கு என் மேல் லவ் வர வச்சி,  இந்த வார்த்தை எல்லாம் தான சொல்ல வைக்கிறேன் டி  சக்கர ! இனி நான் தினமும் இதே டைத்துக்கு போன் பண்ணுவேன் நீ அட்டன்ட் பண்ற சம்ஜே !" எனவும் 


"எங்க அப்பா கல்யாணத்துக்கு  முன்னாடி போன்ல பேச கூடாதுனு சொல்லிருக்கார்" என்றாள்.


"ஏதே பேசக் கூடாதுனு சொன்னாரா? யார கேட்டு அப்படி சொன்னாரு? பேசிக்காம எப்படி என்னை நீயும் உன்னை நானும் புரிஞ்சிகிறதாம்? இல்ல உங்கப்பன் எந்தக் காலத்துக்கு மேக் டி, ச்ச...உங்கப்பனும் சரி எங்கப்பனும் சரி பழைய பீஸூ புடிச்சி தாலியில போட்டு அடைக்கனும்"என்று கடுப்பாக பேசினான்.


" ஏன் எங்க  அப்பா மேல் உங்களுக்கு இவ்வளவு கோபம்? அவர் உங்க மாமனார்"


"ஸோ வாட்? அதுக்காக  எல்லாம் அந்தாளுக்கு மரியாதை குடுக்க முடியாது. வீட்ல  இருக்கிற லேடீஸ் தனக்கு கீழ தான் நினைக்கறவங்களுக்கு என் மரியாதை இவ்வளவு தான். அப்றம் வரதட்ஷனை நான் வேணா சொன்னா, என் பொண்ணுக்கு செய்வேன்  நின்னா கோபம் வராதா?" என கங்காதரன் மேலுள்ள அபிப்ராயத்தை சொன்னான். அவன் சொன்னது ஒரு பக்கம் சுருக்கென்று இருந்தாலும் , தன் தந்தையை விட அவன் அதி நல்லவனாக தெரிந்தான். 


"அப்றம் மேரேஜ் டேட் ஒரு மாசம் தள்ளி வேற வச்சிருக்கார்  அதுக்கே செம்ம காண்டாகிட்டேன். நிச்சயத்துக்கு அடுத்த நாளே வச்சா என்ன குறைஞ்சி போயிடுவாரா உன் அப்பா? அவ்வளவு நாள் கல்யாணத்திற்கு இருக்கு நினைக்கும் போது எவ்வளவு கோபம் வருது  தெரியுமா?" தனக்குள் அடக்கப்பட்ட ஆத்திரத்தை சொன்னான். அவளுக்கு தான் வெட்கம் முகமெல்லாம் வழிந்தது.


"நா... நான்...  தூங்க போகட்டா?"

"ஏதே !  தூங்க போறீயா?  நான்  மொக்க போட்டுட்டு  இருக்கேனா டி?"

"ஐயோ ! இல்ல இல்ல. நீங்க மொக்க எல்லாம்  போடல. இந்த நேரத்துக்கு எனக்கு ஆட்டோமேட்டிக்கா தூக்கம் வந்திடும் அதான் இப்பையும் எனக்கு  தூக்கம் வந்திடுச்சி" என்றாள்.

"இனி நீ டைத்துக்கு  தூங்கலாம் நினைக்காத. கல்யாணம் ஆகற வரைக்கும் எங்கிட்ட பேசி முடிச்சிட்டு லேட் நைட்ல தான் தூங்கற சம்ஜே !"

"அப்போ கல்யாணதுக்கு அப்றம்?" ஆர்வமாக கேட்க, "அதுவே பழகிடும் டி"  என்றான் சர்வ சாதாரணமாக.

"ஏதே பழகிடுமா? அப்போ கல்யாணத்துக்கு அப்றமும் போன்ல தான் பேசிட்டு இருப்போமா?" 

தலையில் அடித்து கொண்டவன், " அட ! என் மக்கு டீச்சரே ! கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும்  யாராவது போன்ல பேசுவாங்களா? உன்னை வச்சிட்டு என்ன டி பண்ண போறேன். கல்யாணத்துக்கு அப்றம் என் பேச்சி வேற மாதிரி இருக்கும் டி, என் மக்கு டீச்சரே ! வேணும்ன்னா ஒரு ட்ரைலர் மாதிரி பேசிக் காட்டட்டுமா?" ஏற்கெனவே அவனது பேச்சில் சிவந்து போனவள், அநியாயத்துக்கு  சிவந்தாள். அவன் மட்டும்  நேரில் இருந்தால் அந்த சிவப்பு தர்பூசணியை  கடித்து தின்றிருப்பான்.


"போதும் போதும் நீங்க எதுவும் பேசிக்காட்ட வேண்டாம், நான் தூங்க போறேன்  பாய் ! " என்று போனை வைத்து விட்டு  முகத்தை மூடிக் கொண்டாள்.


புலனத்தில் இருந்து அவளுக்கு குறுஞ்செய்தி ஒன்று வர, அதை எடுத்து பார்த்தாள். இவன் தான் அனுப்பிருந்தான்.

"உன்னை முதல் முறையா எங்க பார்த்தேன் தெரியுமா சக்கர?" என்றே அனுப்பிருந்தான்.


"அத,  நாளைக்கு சொல்லுங்க. இப்ப போய் தூங்குங்க குட்நைட் "என்று அனுப்பினாள். உடனே ப்ளூ டிக் காட்டியது


"டைட் ஹாக் வித் கிஸ்ஸோட குட் நைட் டி சக்கர" என்று அனுப்பியதோடு பல முத்த இமோஜிகளையும் அனுப்பிருந்தான். அவளும் பதிலுக்கு எதையும் அனுப்பாமல் டிபியில் இருந்த அவனது புகைப்படத்தை சேமித்து வைத்துக் கொண்டவள் போனை  தூர வைத்து கண்கள் மூட, அவளை இறுக்கி அணைத்து கன்னத்தில் இதழ் பதித்தது போல இருந்தது.  தலையணையை அணைத்த படி கண்களை மூடினாள்.

அவனோ அவளை பார்த்த முதல் கணத்த எண்ணிப் பார்த்தான். 


அந்த மாலை வேளையில் பள்ளி முடிவடைத்திருக்க, கார்த்திக்கையும் ஜனனியையும் அழைக்க வந்திருந்தான் ஆரன். கார்த்திக் மூன்றாம் வகுப்பு என்பதால்  அவனை கீழே அனுப்பி விட்டனர்.ஆனால் ஜனனி முதல் வகுப்பு என்பதால் பெற்றோர்கள் வந்தே அழைத்து செல்ல வேண்டும். கார்த்திக்கை அழைத்துக் கொண்டவன் அவனோடு சேர்ந்து ஜனனியின் வகுப்பை தேடிச் சென்று அவளையும் அழைத்து கொண்டுபாதையில் நடக்க,  கார்த்திக்கின் ஸூ லெஸ் அவிழ்ந்து இருந்தது.


"அப்பா, ஸூ லேஸ் அவுந்துருச்சி" என்றான்."போய் கட்டுறா !" என்றான்.


"எனக்கு கட்ட  தெரியாதுப்பா ! அம்மா தான் கட்டிவிடுவாங்க"


"இது வேறயா, ஏழு கழுத வயசாகிடுச்சி  இன்னும் ஸூ லேஸ் கட்ட  தெரியல உனக்கு" என்று திட்டிய படி, படியினில் நிற்க சொல்லி கீழே அமர்ந்து கட்டிவிட்டான். " நீயே சிக்ஸ்த் போறவரைக்கும் பாட்டிய தான் கட்ட சொன்னீயாம், இதுல என்ன சொல்றீயா நீ, போ பா !"  பதிலுக்கு அவனும் அவனை வார, ' ஆள பாரு நல்ல உருளைக்கிழங்கு சைஸ்ல இருந்துட்டு என் அப்பன மாதிரி எதிர்த்து பேசுறது உங்க மிஸ் கிட்ட மாட்டிவிடுறேன்' அவனை உள்ளுக்குள் வசைப்பாடினான்.


அப்போது தான் மேல் தளத்திலிருந்து கீழே நேகாவோடு இறங்கி வந்தாள் மேகா. கார்த்திக் மிஸ் வருவதை கண்டவன், " அப்பா மிஸ் !" என்றான். அவனும்  லேஸை கட்டி முடித்து விட்டு நிமிர்ந்தவன் மேகாவை கண்ட நொடி அவள் வசம் வீழ்ந்தான்.


அவள் முகத்தை பார்த்து வாக்கில் எழுந்து நின்றான். அவளோ கார்த்திகைப் பார்த்து சிரித்து விட்டு ஆரனை தீண்டாது ஆடை உரச சென்றாள். அவ்வளவு ஆரன் அங்கே தொலைந்தான்

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2