இதயம் 3
இதயம் - 3 எகாந்த்தின் வருகை சைதன்யாவிற்குப் பிடிக்க வில்லை. அந்த இருவரையும் பார்க்க கடுப்பாக வந்தது. "யார் நீங்க ? எதுக்கு இப்போ பாராட்டு சான்றிதழ் குடுக்கிறீங்க?" என முகத்தை சுழித்து விட்டு கேட்டான். "இவன் என் கசின், என் வொர்க்கப் பத்தி தெரிஞ்சதுனால என்னை பாராட்டுறான். நல்லா இருக்கோ இல்லையோ பாராட்ட ஒரு மனசு வேணுமே அது ஒரு சில ஜென்மத்துக்கு எல்லாம் தெரியவே தெரியாது போல" என்று அவனுக்கு ஒரு குட்டு வைத்தாள். புகைப்படத்தை கண்டு அவன் வியந்து பார்த்ததை அவள் பார்க்கத் தான் செய்தாள். ஆனால் அவனிடமிருந்து ஒருவார்த்தை கூட பாராட்டாகவும் இல்லை பதிலாகவும் வரவில்லை . புகைப்படத்தை கண்டு பாராட்ட எண்ணினாலும்'அவள் ஒரு பெண்... அவளை பாராட்டுவதா?' என்ற ஏளனம் அவன் கண்ணில் அதிகம் தென்படவே அப்படிச் சொன்னாள். தன்னை தான் ஜாடையாக சொல்கிறாள் என புரிந்துக் கொண்டவன் அவளை முறைத்து விட்டு" பிரவஸ்தி, இன்னும் ஏன் இங்க நின்னுட்டு இருக்க? நேரமாச்சி வா போலாம்" என்று பல்லைக்கடித்தான். "ஓகேங்க... ரொம்ப தேங்க்ஸ் என்னை இவ்வளவு அழகா போட்டோ எடுத்ததுக்கு நான் வர்றேன்"