வரனே உன் வசமானேன் - டீஸர்


டீஸர் 


 "ஏய் சக்கர ! நிறுத்து டி உன் அழுகைய !" பொறுமையிழந்து கத்திவிட்டான். அழுது கொண்டிருந்தவள், அவனை' பே ' வென பார்த்து நின்றாள்."சொல்வாங்களே ! அழகு இருந்தால் அறிவு சுத்தமா இருக்காதுனு அது உன் விஷயத்துல உண்மை தான் டேமிட்... சரியான மக்கு டீச்சர் டி நீ ! உண்மை என்னானு  எங்கிட்ட கேட்டுட்டாவது  அழுகணும், அதை விட்டு  பொசுக்குன்னு இன்னாதுக்கு  அழுகற நீ ? என்ன பண்ணிட்டாங்க உன்னை? இல்ல கேக்குறேன் நீ நல்லா தான இருக்க? சொல்லு நீ நல்லா தான இருக்க?" எனக் குரலை உயர்த்தி கேட்டான். பள்ளியில்  எத்தனையோ மாணவர்களை மிரட்டிய சாபம் தான் இப்போது அவளை ஒருத்தன் மிரட்டிக் கொண்டிருக்கிறான்.


அவளது தலை ' ஆம்' என்று செங்குத்தாக ஆடியது." கைகால்  நல்லா  தான இருக்கு? இல்ல இழுத்துக்கிச்சா?" இன்னும் கோபம் குறையாமல் கேட்க,  கண்ணீர் கண்ணில் உறைய ' ஆம் ' ' இல்லை 'என்று  ஆட்டினாள்.


"எல்லாம் நல்லா இருக்க, எதுக்கு டி உனக்கு செகண்ட் மேரேஜ் பண்ணி வைக்கணும்? உங்க அப்பன் என்ன இல்லாதவனா? இல்ல வீட்ல கஷ்டமா?" எனக் கொஞ்சம்  கீழிறங்கி  கேட்கவும் அவளுக்கு சுர்ரென கோபமேற, முகத்தை சுருக்கிக் கோபத்தை காட்ட " ஓ... மேடமுக்கு கோபம் வருதோ ! சித்தப்பாக்கும் அப்பாக்கும் வித்தியாசம் தெரியாத மக்கு டீச்சருக்கு  கோபம் ஒன்னு தான் அவசியம்" அவளை கோபத்தில் நாறுநாறாக கிழிக்க வேண்டும் நோக்கத்தில்  இறங்கி விட்டான் போலும் திட்டுவதை நிறுத்தவே இல்லை.


'சித்தப்பா வா, ச்ச... மேகா  தப்பா புரிஞ்சிகிட்டு அவன் முன்னாடி சீனெல்லாம் போட்டியே !  மக்கு டீச்சர்னு திட்றளவுக்கு கொண்டு வந்திட்டியே , இவன் திட்றத  எப்படி நிறுத்தறது? ' என செயவதறியாது நின்றாள்.


"ஆரன்னு, வீட்ல என் பேர  சொல்லிருப்பாங்க தான, கார்த்திக் இன்ஷியல் (t) எங்க  அண்ணன் பேர் தீரன். உன்னை எல்லாம் யாரு  டீச்சரா வேலைக்கு எடுத்தது?   உன்னை கேட்காம உன் வீட்ல எப்படி செகண்ட்  மேரேஜ் பண்ணி வைப்பாங்க? அவ்வளவு நம்பிக்கை என்ன?" அவன் திட்டுவதை நிறுத்துவதாக இல்லை.

 ****

நா... நான்...  தூங்க போகட்டா?"

"ஏதே !  தூங்க போறீயா?  நான்  மொக்க போட்டுட்டு  இருக்கேனா டி?"

"ஐயோ ! இல்ல இல்ல. நீங்க மொக்க எல்லாம்  போடல. இந்த நேரத்துக்கு எனக்கு ஆட்டோமேட்டிக்கா தூக்கம் வந்திடும் அதான் இப்பையும் எனக்கு  தூக்கம் வந்திடுச்சி" என்றாள்.

"இனி நீ டைத்துக்கு  தூங்கலாம் நினைக்காத. கல்யாணம் ஆகற வரைக்கும் எங்கிட்ட பேசி முடிச்சிட்டு லேட் நைட்ல தான் தூங்கற சம்ஜே !"


"அப்போ கல்யாணதுக்கு அப்றம்?" ஆர்வமாக கேட்க,



 "அதுவே பழகிடும் டி"  என்றான் சர்வ சாதாரணமாக.



"ஏதே பழகிடுமா? அப்போ கல்யாணத்துக்கு அப்றமும் போன்ல தான் பேசிட்டு இருப்போமா?" 

தலையில் அடித்து கொண்டவன், " அட ! என் மக்கு டீச்சரே ! கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும்  யாராவது போன்ல பேசுவாங்களா? உன்னை வச்சிட்டு என்ன டி பண்ண போறேன்? கல்யாணத்துக்கு அப்றம் என் பேச்சி வேற மாதிரி இருக்கும் டி, என் மக்கு டீச்சரே ! வேணும்ன்னா ஒரு ட்ரைலர் மாதிரி பேசிக் காட்டட்டுமா?" ஏற்கெனவே அவனது பேச்சில் சிவந்து போனவள், அநியாயத்துக்கு  சிவந்தாள். அவன் மட்டும்  நேரில் இருந்தால் அந்த சிவப்பு தர்பூசணியை  கடித்து தின்றிருப்பான்.


"போதும் போதும் நீங்க எதுவும் பேசிக்காட்ட வேண்டாம், நான் தூங்க போறேன்  பாய் ! " என்று போனை வைத்து விட்டு  முகத்தை மூடிக் கொண்டாள்.


புலனத்தில் இருந்து அவளுக்கு குறுஞ்செய்தி ஒன்று வர, அதை எடுத்து பார்த்தாள். இவன் தான் அனுப்பிருந்தான்.

"உன்னை முதல் முறையா எங்க பார்த்தேன் தெரியுமா சக்கர?" என்றே அனுப்பிருந்தான்.


"அத,  நாளைக்கு சொல்லுங்க. இப்ப போய் தூங்குங்க குட்நைட் "என்று அனுப்பினாள். உடனே ப்ளூ டிக் காட்டியது


"டைட் ஹாக் வித் கிஸ்ஸோட குட் நைட் டி சக்கர" என்று அனுப்பியதோடு பல முத்த இமோஜிகளையும் அனுப்பிருந்தான். அவளும் பதிலுக்கு எதையும் அனுப்பாமல் டிபியில் இருந்த அவனது புகைப்படத்தை சேமித்து வைத்துக் கொண்டவள் போனை  தூர வைத்து கண்கள் மூட, அவளை இறுக்கி அணைத்து கன்னத்தில் இதழ் பதித்தது போல இருந்தது.  தலையணையை அணைத்த படி கண்களை மூடினாள்.


***

இருவர்  எதிரெதிரே அமர ,நேகா  தள்ளி அமர்ந்தாள். அவன் முகம் பாராமல் வேறெங்கோ வெறித்த படி  அமர்ந்திருந்தவளின் கையை பற்ற வெடுக்கென எடுத்துக் கொண்டாள்.


"என் மேல என்னடி கோபம் உனக்கு? நான்  என்னடி பண்ணேன்?"


"நீங்க என்ன பண்ணல ஆரன்?  என் குடும்ப மொத்ததுக்கும் முன்னாடி என் மானத்த வாங்கிட்டீங்க . எல்லார்  முன்னாடியும் புழுவா துடிச்சி போனேன். என் அப்பா  கேட்ட  கேள்வி என்னை மொத்தம்மா சாக அடிச்சிருச்சு. எதுக்கு வாழ்றோம்ன்ற எண்ணம் மட்டும் தான் மனசுல ஓடிட்டு இருக்கு... காதலிச்சது தான் பண்ண பெரிய தப்பே ! அதுக்கு நான் இன்னும் என்ன என்ன அனுபவிக்க போறேன் தெரியல" என சிந்திய கண்ணீரை துடைத்த படி சொன்னாள். "அப்படியே ஓங்கி அடிச்சேன் வையேன் பல்லெல்லாம் பேந்திடும். என்னடி தப்பு பண்ண?  என்னை காதலிச்சது தான் தப்புனு சொல்வர்றீயா? தப்புனு நினைக்கிற அளவுக்கு நான்  என்னடி பண்ணினேன்?"


"என்ன பண்ணேன் பண்ணேன் கேட்காதீங்க ஆரன்.  நீங்க கொடைக்கானல் எடுத்த போட்டோவை அனுப்பினதுனால தான் இவ்வளவு பிரச்சினை" 


"போட்டோ அனுப்பினதுனால தான் அவங்க நம்பினாங்க... இல்லேன்னா அது  வதந்தினு சொல்லி உங்க அப்பா பேச்சை  கேட்டு இந்தக் கல்யாணத்த பேசி முடிச்சிருப்பாங்கடி" 


"அதுக்கு நான் சம்மதிக்கணும் ஆரன் என் சம்மதமும் இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ணுவாங்க? நான் ஸ்டெடியா தான் இருக்கேன் ஆரன். ஆனா, நீங்க தான் என்னை நம்பல !" என்றாள் விரக்தியில்  சிரித்தபடி


"லூசு தனமா பேசாத மேகா ! நான் அவங்களை நம்ப வைக்க தான்டி போட்டோ அனுப்பினேன்" 


"அவங்கள ஏன் நீங்க நம்ப வைக்கணும்? அவங்க நம்புறாங்க நம்பல அது வேற விஷயம், ஆனா நீங்க ஏன் யோசிக்கல ஆரன்? இதுனால அவளுக்கு  பிரச்சனை வரும் ஏன் ஆரன் யோசிக்கல? " 


"யோசிச்சேன்டி ஆனா, என் காதலை காப்பாத்திக்க வேற வழி தெரியல.."


"உங்க காதலை காப்பாத்திக்க என்னை நீங்க இழந்துட்டீங்க ஆரன் .!" என்றதும் பதறினான்"மேகா, நான் சொல்றத கொஞ்சம் கேளுடி" 


"என்ன சொல்ல போறீங்க ஆரன். நீங்க பண்ணினது உங்களுக்கு நியாயமா இருக்கலாம். ஆனா எனக்கு இல்ல. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்ல... அதுனால இப்படி ஒரு காரியத்தை செஞ்சிங்க...  கொடைக்கானலுக்கு போறதா வீட்ல சொல்லிட்டு போகல, அவங்களுக்கு தெரிஞ்சாலும் ஒன்னும் சொல்லாம இருக்க... நாம எப்படி போனோம் உங்களுக்கு தெரியும் தான ! அப்போ ஏன் அனுப்பினீங்க ?  அவர் கேட்ட கேள்வியால என் உடம்பெல்லாம் கூசி போயிருச்சு ஆரன்.பெத்த பொண்ணு கிட்ட கேக்கிற கேள்வியா இது?" 


"தெரியிதுல அப்போ அவர் கிட்ட உன் கோபத்தை கட்ட வேண்டியது தான... ஏன் அமைதி இருந்த மேகா?"


"எப்படி காட்ட  சொல்றீங்க ஆரன்? நான் அவர் கிட்ட சொல்லிட்டு ஒன்னும் கொடைக்கானலுக்கு உங்க கூட வரல, அவரை ஏமாத்தி அவர் நம்பிக்கை ஒடைச்சிட்டு உங்க கூட வந்திருக்கேன். அவர் கேட்டது தப்பு தான். ஆனா நான் செஞ்சது சரி இல்லயே !"


"உங்கள பார்த்தது உங்கள பிடிச்சிருக்கு சொன்னது  காஃபி சாப்'க்கு வந்தது உங்க கிட்ட போன்ல பேசினது உங்க பேச்சை கேட்டு உங்க கூட கொடைக்கானலுக்கு வந்தது  எல்லாம் தப்பு. அந்த தப்புக்கு தான் தண்டனை கொடுத்துட்டீங்க. அவருக்கு  நான் மகளா பொறந்ததே  தப்பு அதுக்கும் அவர் எனக்கு தண்டனை கொடுத்துட்டார்.


நான் நேசிச்ச  நீங்க ரெண்டு பேருமே என்னை புரிஞ்சிக்கல... அவருக்கு அவர் கௌரவம் முக்கியம் உங்களுக்கு உங்க காதல் முக்கியம்... இடையில் என் நிலமைய யாரும் யோசிக்கவுமில்ல புருஞ்சுக்கவுமில்ல. வலிய மட்டும் தான் கொடுக்கறீங்க. எனக்கு நீங்களும் வேணாம் அவரும் வேணாம். எனக்கு யாரும் வேண்டாம். ப்ளீஸ் என்னை சமாதானம் பண்றேன் என் பின்னாடி வர வேண்டாம்.  முதல்ல உங்கள காப்பாத்திக்க வழிய பாருங்க " என்று  அவன் பதிலை எதிர்பாராது சென்று விட்டாள்.

 

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2